1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. j deepa said vijay is following jayalalitha

விஜய் இப்ப பேசுறத ஜெயலலிதா எப்பவோ பேசிட்டார்... ஜெ.தீபா பேட்டி...

vijay
நடிகர் விஜய் அரசியலில் இறங்கி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறிவிட்டார்.. அதோடு கட்சி துவங்கியது முதலே எல்லா மேடைகளிலும் திமுகவை அவர் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.அதுவும் கரூர் சம்பத்திற்கு பின் திமுக மீதான கோபம் விஜய்க்கு அதிகரித்து விட்டது. கரூரில் வேண்டுமென்றே சிலர் கூட்டத்தில் சதி செய்து மக்கள் இறக்க காரணமாகி விட்டார்கள்.. திமுக தன்னை குற்றம் சொல்கிறது என்கிற கோபம் விஜய்க்கு இருக்கிறது.

சமீபத்தில் வேலூரில் பேசிய போதும் ‘முதல்வர் எல்லோரையும் தனது நண்பர்கள் என சொல்கிறார். அப்படி இருந்தால் ஏன் சார் கரூர் சம்பவத்தில் என் மீது பழிபோட்டீர்கள்?’ என
திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலினை நோக்கி அவர் கேள்வி எழுப்பியிருந்தார்..

மேலும் ‘திமுக ஒரு தீய சக்தி’ என தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், விஜயின் அரசியல் பிரவேசம் பற்றியும், அவர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசுவது பற்றியும் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா ‘விஜய் அதிமுக ஓட்டை மட்டுமல்லாமல் எல்லா கட்சிகளின் ஓட்டையும் பிரிப்பார்.. இன்று அவரின் மேடைப்பேச்சுகள் எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா பேசியதுதான்’ என கூறியிருக்கிறார்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மனைவி வீட்ல சும்மா இருக்காங்கன்னு சொல்லக்கூடாது!.. நீதிமன்றம் கருத்து!...