1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Harbours make cyclone warning flags

12 மணி நேரத்திற்குள் புயல்; துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

Tamilnadu
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையாக கடந்த மாதம் முதலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் தற்போது புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயலாக உருமாற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, நாகப்பட்டிணம், சென்னை உட்பட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனினும் இந்த புயல் ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஒமிக்ரான் குறித்த கேள்விகளுக்கு பதில் இல்லை - கைவிரித்த WHO!