தொடர்புடைய செய்திகள்
- டாக்டர் ஓடிடி ரிலீஸை மறுத்துள்ள தயாரிப்பாளர்!
- ரஜினிக்காக கதை எழுதியுள்ள ஷங்கரின் உதவியாளர்… மீண்டும் நடக்குமா ஒரு தில்லு முல்லு!
- அமெரிக்காவின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி! – நான்காவதாக அனுமதி பெற்ற மாடர்னா!
- காத்திருக்கும் கொரோனா மூன்றாவது அலை! நடவடிக்கை என்ன? – நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்!
- ஒளிப்பதிவு சட்டத்திருத்த சட்டம்… கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு!
கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பரிசோதனைகளை குறைக்க கூடாது: டாக்டர் ராமதாஸ்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க கூடாது என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
தமிழகத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதனை மருத்துவர்கள் உள்பட அனைத்து தரப்பினர்களும் பாராட்டியுள்ளனர். பரிசோதனை அதிகரிக்க அதிகரிக்க தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இதுகுறித்து கூறியதாவது:
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 5000-க்கும் கீழ் குறைந்தாலும் தினசரி சோதனைகளின் எண்ணிக்கை 1.60 லட்சத்திற்கும் கீழ் குறையாமல் தொடர்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு இது சரியான நடவடிக்கை!
தமிழ்நாட்டில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை இதே அளவில் தொடர வேண்டும். கொரோனா பரவல் தீவிரமடைகிறதா? என்பதை கண்காணிப்பதற்கான சிறந்த வழிமுறை சோதனைகள் தான். அவை குறைக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்!
அடுத்த கட்டுரையில்
