1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ct nirmalkumar says mk stalin not arrested under misa

பொண்ணுங்க கேஸ் மிசாவில் வராது!.. சட்டசபையில் பேசிய சிடி நிர்மல்குமார்...

stalin nirmal kumar
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தமிழகத்தில் மிசா கொண்டுவரப்பட்டது. அதை எதிர்த்து போராடியதற்காக கலைஞர் கருணாநிதி மகன் முக ஸ்டாலினை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்து அவரை தாக்கியதாக திமுகவினர் சொல்கிறார்கள். ஆனால் சிலர் அதை மறுக்கிறார்கள்..

இந்திரா காந்தி குறித்து முக ஸ்டாலின் மிகவும் அவதூறாக பேசியதால்தான் அவர் கைது செய்யப்பட்டார்.. மிசாவில் கைது செய்வது வேறு.. மிசா காலத்தில் கைது செய்வது வேறு.. மிசா காலத்தில் கைது செய்தாலே அது மிசாவில் கைது செய்யப்பட்டதாக ஆகாது. திமுக அதை வைத்து அரசியல் செய்து வருகிறது.. ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததாக ஒரு பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள் என அவர்கள் சொல்கிறார்கள்..

நேற்று சட்டசபையில் முதல்வர் பேசிய விஜய் மிசா காலத்தில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும் என்று கூறி ஒரு சைகையையும் காட்டினார். அதாவது அப்போது காவல்துறையினர் முக ஸ்டாலின் முகத்தில் தாக்கியதில் அவரின் தாடை பகுதி பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.. அதைத்தான் விஜய் செய்கையில் காட்டினார் என்கிறார்கள். விஜய்யின் இந்த செயலை கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் கண்டித்துள்ளனர்.  சட்டசபையில் முதலமைச்சர் இப்படி பேசுவது அழகல்ல என அவர்கள் அறிவுரை கூறியிருக்கிறார்கள்..

இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் ‘மிசா காலகட்டத்தில் திருட்டு வழக்குகள், கொள்ளை வழக்குகள்,  பெண்கள் மீது அவதூறு செய்யப்பட்டு தொடர்ந்த வழக்குகள் என பலரையும் கைது செய்தார்கள்.. அவர்கள் எல்லோரையும் மிசா வழக்கில் கைது செய்யப்பட்டக கருத முடியாது.. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை பற்றி அவதூறாக பேசியதால்தான் முக ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.. பெண்கள் குறித்து அவதூராக பேசியதால்தான் அவர் கைது செய்யப்பட்டாரே தவிர மிசா வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார் என எந்த குறிப்பிலும் இல்லை’ எனக் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பெண்ணில் வயிற்றிலிருந்து 14 பேனா, 5 ஸ்பூன்!.. மருத்துவர்கள் அதிர்ச்சி...