தொடர்புடைய செய்திகள்
- 5 வருடங்களாக ஹோட்டலில் தங்கியிருந்த கே.ராஜன்!.. தற்கொலைக்கு என்ன காரணம்?...
- பெண்களால் பாதிக்கப்படும் ஆண்கள்.. தனி ஹெல்ப்லைன் எண் தேவை.. முதல்வர் விஜய்க்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை..!
- மாணவர்கள் ஃபேனில் கயிறு கட்டி தற்கொலையை தடுக்க இரும்பு வலை.. நெட்டிசன்கள் கிண்டல்..!
- மனைவியுடன் விடிய விடிய சண்டை.. பாத்ரூமில் தூக்கில் தொங்கிய நீதிபதி..!
- தற்கொலைக்கு தூண்டிய ஜெமினி AI.. சாட்பாட் பேச்சை கேட்டு வாலிபர் விபரீத முடிவு
என் அம்மாவை பத்திரமா பாத்துக்கோ!.. நண்பனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளைஞர் தற்கொலை!...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள வடக்கு இலந்தை குளம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்(21). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய சுரேஷ் தனது நண்பரான காளிராஜ் என்பவருக்கு செல்போனில் ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.
அதில் என்னுடைய அம்மாவை நீ நல்லா பாத்துக்கோ.. நீங்க எல்லாம் சந்தோஷமா இருங்க.. எல்லாரும் ஹாப்பியா இருங்க; என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சந்தேகமடைந்த காளிராஜ் உடனே சுரேஷின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அதோடு, அவரும் சுரேஷின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் சுரேஷ் தூக்கில் தொங்குவதை கண்டு எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக கயத்தாறு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுரேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தற்போது வரை யாருக்கும் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அதில் என்னுடைய அம்மாவை நீ நல்லா பாத்துக்கோ.. நீங்க எல்லாம் சந்தோஷமா இருங்க.. எல்லாரும் ஹாப்பியா இருங்க; என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சந்தேகமடைந்த காளிராஜ் உடனே சுரேஷின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அதோடு, அவரும் சுரேஷின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் சுரேஷ் தூக்கில் தொங்குவதை கண்டு எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.
