1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay decided to give answer in the assembly

இனிமே பேசினா சட்டசபையிலேயே பதிலடி!.. விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!..

udhya vijay
முதலமைச்சர் விஜய் பொதுவாகவே அமைதியான சுபாவம் கொண்டவர். அதிகம் பேசாதவர். தனிமை விரும்பி என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் தற்போது அவர் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராகவும் மாறிவிட்டார். முதலமைச்சராக மாறிய பின்னரும் மேடைகளில் மட்டுமே அவர் அதிகம் பேசுகிறார். மற்ற இடங்களில் எங்கும் விஜய் அதிகம் பேசுவதில்லை. செய்தியாளர்களை கூட அவர் சந்திப்பதில்லை. அது தொடர்பான விமர்சனங்களையும் அவர் கண்டு கொள்வதில்லை..

முதல்வர் விஜய் சட்டசபையில் கலந்து கொண்ட முதல் நாள் நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது தவெகவின் செயல்பாடுகளை முன்னாள் துணை முதல்வர் உதயநிதி கடுமையாக விமர்சித்து பேசினார். ஆனால் விஜய் அங்கு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அமைச்சர்களையும் அவர் பேச அனுமதிக்கவில்லை. ஆனால், முதல்வர் விஜய் வீட்டுக்கு சென்ற பின் அவரின் எக்ஸ் தளத்தில் உதயநிதி பேச்சுக்கு பதிலடி கொடுத்து ஒரு பக்க கட்டுரை வெளியானது..

அப்போதே அதை பலரும் விமர்சித்தார்கள். உதயநிதியின் பேச்சுக்கு முதல்வர் விஜய் சட்டசபையிலேயே பதிலடி கொடுத்திருக்க வேண்டும் என பலரும் சொன்னார்கள். இது தொடர்பாக அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பினார்கள்
.

இந்நிலையில் வரும் நாட்களில் அந்த விமர்சனத்தை தவிர்ப்பதற்காக அனைத்து துறைகளிலும் முக்கிய அதிகாரிகள் மட்டுமில்லாமல் சுருக்கெழுத்து நிபுணரையும் சட்டசபைக்கு வர சொல்லியிருக்கிறார்களாம். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு சட்ட சபையிலேயே தக்க பதிலடி தயார் செய்து கொடுப்பதற்காக இந்த ஏற்பாடு என சொல்லப்படுகிறது. அதோடு அமைச்சர்களும் சட்டசபையில் பேச விருப்பதால் அவரவர் துறை தொடர்பான புரிதலுடன் அவைக்கு வர வேண்டும் எனவும் விஜய் அறிவுறுத்தி இருக்கிறாராம். எம்.எல்.ஏக்கள் எப்படி பேச வேண்டும் என சபநாயகர் ஜேசிடி பிரபாகரம் பயிற்சி பட்டறையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
என் போட்டோவை யூஸ் பண்ணக்கூடாது!.. லாரன்ஸ், அண்ணாமலைக்கு செக் வைத்த ரஜினி!..