1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. anitha radhakrishnan has to sign everyday

10 நாள் போலீஸ் ஷ்டேசனில் கையெழுத்து போடணும்!.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவு!..

anitha radhakrishnan
கடந்த மாதம் 20ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் ஒரு திமுக விழாவில் பேசிய திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வர் விஜயை ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார்.. விஜயை ஒரு நடிகையோடு தொடர்பு படுத்தியும், விஜய் மனைவியை பற்றியையும் மிகவும் மோசமாக பேசினார்.

இது தவெகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்த ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் சென்னை நீதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அனித ராதாகிருஷ்ணன் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதையடுத்து, நேற்று ஆத்தூர் காவல் நிலைய போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம் மேஜிஸ்ட்ரேட் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார்.. அதன்பின், அனிதா ராதாகிருஷ்ணனை சொந்த ஜாமினில் விடுவித்த மேஜிஸ்ட்ரேட் 10 நாளைக்கு காவல்நிலையில் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்..