1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. adhav arjuna explain why admk joins in tvk

அதிமுக காரங்களை இதனால்தான் தவெகவில் சேர்க்கிறோம்!.. ஆதவ் அர்ஜுனா ஓப்பனா சொல்லிட்டாரே!..

adhav arjuna
அதிமுக கட்சியிலிருந்து தவெகவில் இன்று பலரும் இணையும் இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

தவெக எம்எல்ஏவை விலைக்கு வாங்க ரூ.50 கோடி வரை பேரம் பேசியுள்ளனர். நாங்கள் தேர்தலை கண்டு பயப்படவில்லை. மீண்டும் தேர்தல் வந்தால் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றிபெறும்.. முதல்வ்வர் விஜய்யை பிரசாரம் செய்யவிடாமல் பல்வேறு சூழ்ச்சிகளை செய்தனர். செயற்கையான கூட்ட நெரிசல் விபத்தை ஏற்படுத்த திமுக முயற்சி செய்தது. குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திமுக பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறது.

அரசியலில் வெற்றி மிகவும் முக்கியம், தேர்தல் அரசியல் முக்கியம். தேர்தல் அரசியல் தெரிந்த நிர்வாகிகள் இணைப்பு தேவை. தமிழ்நாட்டை உருவாக்க அடித்தளம் கொண்ட உறுதியான கட்சி வேண்டும். அப்படித்தான் அதிமுகவினர் தவெகவில் இணைகிறார்கள்.
ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்று சேர்வதற்கு முன், ஒட்டுமொத்த அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் தவெகவில் இணைய வேண்டும் என எங்கள் தலைவர் ஒரு அரசியல் வியூகம் வகுத்தார். அதுதான் தற்போது நடைபெற்று வருகிறது.

கடைசி 15 நாளில் முதல்வர் விஜய் ஏன் எல்லா ஊருக்கும் செல்லவில்லை ரியுமா? பல ஊர்களில் காவல்துறையின் ஆதரவு கிடைக்கவில்லை. ஆதரவு இருந்த ஊர்களுக்கு மட்டுமே தலைவர் சென்றார். திருப்பூரில் காவல்துறை ஆதரவு கிடைக்கவில்லை. காவல்துறை விலகிப் போய் மீண்டும் ஒரு கூட்ட நெரிசலை உருவாக்க நினைத்தார்கள். அதனால்தான் தலைவர் விஜய் பல ஊர்களுக்கும் பிரச்சாரத்தை ரத்து செய்தார்’ என பேசியிருக்கிறார்.