1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor arjun says we want sanathanam

சனாதானம் கண்டிப்பாக தேவை!.. நடிகர் அர்ஜூன் பேட்டி!...

arjun
பாஜக எப்போது மத்தியில் ஆட்சியை பிடித்ததோ அப்போது முதலே சனாதானம் என்கிற வார்த்தை தமிழகத்தில் ஒலிக்க துவங்கிவிட்டது. ஆனால், பகுத்தறிவுவாதிகளும், திமுகவினரும் சனாதனத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள். சனாதானம் மனிதர்களை மதம், சாதி, இனம் வாரியாக பிரிக்கிறது. மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.

மேலும், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என திமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் தொடர்ந்து கூறி வருகிறார். தற்போது திமுக எதிர்கட்சியாக அமர்ந்துள்ள நிலையிலும் உதயநிதி ஸ்ஆலின் சட்டசபையில் இதை இரண்டு முறை கூறினார்.

இந்நிலையில், விழா ஒன்றில் பேசிய நடிகர் அர்ஜூன் ‘சனாதனம் என்பது மதம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை.. திருடக்கூடாது.. மற்றவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என பல விஷயங்களை சனாதனம் போதிக்கிறது.. சிறுவயதில் நமது பெற்றோர் எவ்வளவு அழகாக நம்மை பார்த்துக் கொண்டனர்..

அதேபோல் பெற்றோரை அவர்களது முதுமையிலும் நாம் கடவுள் போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சனாதனம் போதிக்கிறது.. சமாதானம் இருக்கக் கூடாது என்றால் உங்களுக்கு பெற்றோரை வெளியே விரட்டுங்கள்.. அது முடியுமா?’ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.