1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (09:33 IST)

50 ஆயிரத்தை தாண்டியது தினசரி பாதிப்பு – இந்தியாவை மிரட்டும் கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கு மேல் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. சமீபகாலமாக 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,50,18,358 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 534 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,82,551 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,43,21,803 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,14,004 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.