1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 5 ஜனவரி 2022 (08:50 IST)

அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைப்பு: ஐபிஎல் நடக்குமா?

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவும் கொரோனா. வைரஸ் பாதிப்பு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது 
 
இதன்படி இந்த ஆண்டு சீசனுக்கான இரஞ்சி டிராபி நாயுடு, கர்னல் சிகே நாயுடு டிராபில், சீனியர் மகளிர் டி20 லீக் போட்டிகள் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
 
மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த அமைப்பில் போட்டிகளும் ஒத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது