1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. three year old girl molested in jharkhand

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!.. ஒரு லட்சம் அபாரதம் வாங்கி சரக்கடிச்ச பஞ்சாயத்து!..

girl
இந்தியாவில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல வருடங்களாக இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டாலும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நின்றபாடில்லை. அதிலும் வட மாநிலங்களில் படிப்பறிவு மிகவும் குறைவாக இருப்பதால் சிறுமிகள் முதல் பெண்கள் வரை அங்கே பாலியல் வன்கொடுமைகள் மிகவும் சாதாரணமாக நடைபெறுகிறது.

அதற்கு முக்கிய காரணம் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் நபர்களுக்கு அதிகப்படியான தண்டனை கிடைப்பதில்லை. சட்டத்தின் ஓட்டையிலிருந்து அவர்கள் சுலபமாக தப்பித்துவிடுவதால் பலரும் இதை துணிந்து செய்கிறார்கள்..

இந்நிலையில்தான், ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரிடம் தண்டனையாக ஒரு லட்சம் வசூலித்து அவரிடம் சேர்ந்து பஞ்சாயத்து தலைவர் மது அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காவல்துறைக்கு தெரிவிக்காமல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுனில் என்பவரிடமிருந்து முதல் கட்டமாக 20 ஆயிரம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த பணத்தில் பஞ்சாயத்து தலைவர் சுனிலுடன் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார். ஆனாலும் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் காவல்துறையிடம் புகாரளிக்க க சிறுமியின் தாயிடம் வாக்குமூலம் பெற்று தற்போது சுனிலை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.