தொடர்புடைய செய்திகள்
- மீதமிருந்த மூன்று தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்! – பாஜக அறிவிப்பு!
- மெல்ல விலை உயரும் தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!
- ரோபோட் சின்னம் கிடைக்கல..? டைம் இல்ல! தேர்தலில் போட்டியிடாத அர்ஜுன மூர்த்தி கட்சி
- தமிழகத்தில் மீண்டும் கொரோனா லாக்டவுனா? – சுகாதாதத்துறை செயலாளர் விளக்கம்!
- கும்பலோடு வேட்புமனு தாக்கல்! – ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் மீது வழக்கு!
கொரோனா காரணமாக தேர்தல் ஒத்திவைப்பா? – சர்ச்சைக்கு சத்யபிரதா சாகு விளக்கம்!
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு விளக்கமளித்துள்ளார்.
தமிழகம், குஜராத், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்புகளுக்கு இடையே 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. கொரோனா காரணமாக தேர்தல் தேதி ஒத்திவைக்கப்படலாம் என சமூக வலைதளங்களில் பேசிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “கொரோனா காரணமாக தேர்தலை ஒத்திவைப்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. திட்டமிட்ட தேதியில் தேர்தல் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
