1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Sabarimala ayyappan dharshan time extended

சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசன நேரம் நீடிப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி

Sabarimala
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி வருவார்கள் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
இதுவரை இரவு 10 மணி வரை மட்டுமே சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 11. 30 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது 
 
மேலும் தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டு வருவதால் 10 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுவதால் தரிசன நேரம் நீட்டிப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை