1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. supreme court order to ban for high court judgement

பசுக்கள், கன்றுகளை பொது இடத்தில் வெட்ட அனுமதி!.. தடையை நீக்கிய உச்சநீதிமன்றம்!..

cow
பக்ரீத் பண்டிகைக்காக கோவையில் பொது இடங்களில் பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகள் வெட்டப்படுவதை தடுக்குமாறு இந்து மக்கள் கட்சியினை சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்றம் பொது இடங்களில் மாடுகளை வெட்டக்கூடாது 2020ம் வருடம் தடை விதித்தது.

ஆனால் இதை எதிர்த்து கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதிக்குமாறு தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது ‘கடந்த 10 வருடங்களாக உழுதல், சுமை தூக்குதல், இனப்பெருக்கம் போன்ற வேலைகளை செய்யாத பசுக்களை வதம் செய்யலாம் என ஏற்கனவே விலங்குகள் பாதுகாப்பு சட்டம் சொல்லியிருக்கிறது.  ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது’ என தமிழக அரசு சார்பு சார்பில் வழக்கறிஞர் வாதிட்டார். இதைக்கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகு தடை விதித்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
ரூ.30,000 விலைக்குள் மோட்டோரோலாவின் புதிய மாடல்.. அதிலும் ரூ.2500 தள்ளுபடி.. முழு விவரங்கள்...