1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 20 நவம்பர் 2021 (07:30 IST)

பம்பையில் வெள்ளம் - சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

கடந்த சில நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பக்தர்களுக்கு தடை என்ற அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் காரணமாக பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் திவ்யா என்பவரை உத்தரவிட்டுள்ளார்
 
மழை குறைந்து பம்பை ஆற்றில் நீர்வரத்து குறைந்த பின்னரே ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது