1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Madurai Balusamy dead in maoists attack

மதுரையைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் சத்தீஸ்கரில் மரணம்: மாவோயிஸ்டுகள் தாக்குதல்

மதுரை
மதுரையைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் சத்தீஸ்கரில் மரணம்
மதுரையைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில வருடங்களாக மாவோயிஸ்டுகள் தாக்குதல் அதிகரித்து கொண்டே வருவதும் இதனால் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட பலர் மரணம் அடைந்து வருவது வழக்கமாக உள்ளது
 
இந்த நிலையில் நேற்று நடந்த மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் பாலுசாமி என்பவர் வீரமரணம் அடைந்தார். இவர் மதுரை அழகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் என்பதும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் பாலுசாமி வீர மரணமடைந்த தகவல் கேட்டு அவரது சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது மிக விரைவில் அவருடைய உடல் மதுரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை பாலுச்சாமி அவர்களின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
அடுத்த கட்டுரையில்
டீசல் விலை எதிரொலி: பேருந்து கட்டணத்தை உயர்ந்த அரசு முடிவு?