1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. alcohol supplied in Tihar jail?

சிறையில் உள்ள கைதிகளுக்கு மதுபானம்? விசாரணைக்குழு அமைப்பு

திகார்
திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 டெல்லியில் உள்ள திகார் சிறையில் அறை எண் 7ல் உள்ள கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்படுவதாகவும் அதுமட்டுமின்றி அவர்களுக்கு கூடுதலாக சில வசதிகள் வழங்கப்படுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சிறைத்துறை இயக்குனர் சஞ்சய் பணிவால் என்பவர் இதுகுறித்து விசாரணை செய்ய ஒரு குழு அமைத்துள்ளதாகவும் விசாரணை குழுவுக்கு அளவில் உள்ள ஒரு அதிகாரி தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு திகார் சிறை சென்று தீவிரமாக விசாரணை செய்து 10 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா?. செல்லூர் ராஜு