1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (15:45 IST)

போதையில் 2 வயது பிஞ்சுக் குழந்தையை பாழாக்கிய கொடூரன்

டெல்லியில் கொடூரன் ஒருவன் 2 வயது பிஞ்சுக் குழந்தையை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாட்டில் சிறுமிகள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்மங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. 
 
டெல்லியில் 24 வயது வாலிபர் ஒருத்தன் ஃபுல்லாக குடித்துவிட்டு போதையில் அலைந்துள்ளான். பின்னர் 2 வயது சிறுமியை கடத்திய அந்த கொடூரன் ரயில் தண்டவாளம் அருகே அந்த பிஞ்சுக் குழந்தையை நாசமாக்கியுள்ளான். பின்னர் சிறுமியை அங்கிருந்த புதரில் வீசிசென்றுள்ளான்.
 
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீஸாரிடமும் புகார் அளிக்கப்பட்டது.
 
இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணையை தொடங்கிய போலீஸார் குழந்தையை நாசமாக்கிய அயோக்கியனை கைது செய்தனர். அவனை நடுரோட்டில் வைத்து சுட்டுத் தள்ள வேண்டும் என சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளனர்.