1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Stop clock rules implemented from today in international cricket

இன்று முதல் சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் ‘ஸ்டாப் கிளாக்’ ரூல்ஸ்!

ஐசிசி
டி20, ஒருநாள் கிரிக்கெட் போன்ற லிமிடெட் ஓவர் போட்டிகளில் அணிகள் தங்கள் ஓவர்களை முடிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் போட்டியை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முடிக்க முடியாத சூழல் உருவாகிறது. இதுபோன்ற சமயங்களில் அணித் தலைவர் அல்லது மொத்த அணிக்கே அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை ஐசிசி எடுத்து வந்தது.

இந்நிலையில் இதற்கு முடிவு கட்டும் விதமாக ஸ்டாப் கிளாக் முறையை அறிமுகம் செய்ய உள்ளது ஐசிசி. இதன் படி ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 வினாடிகளுக்குள் பவுலிங் அணி தொடங்க வேண்டும். அப்படி 2 முறைக்கு மேல் தொடங்காவிட்டால் நடுவரால் எச்சரிக்கைக் கொடுக்கப்படும். எச்சரிக்கைக்குப் பிறகும் மீண்டும் இந்த தவறை செய்தால் பேட்டிங் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்படும்.

இந்த ஸ்டாப் கிளாக் விதி இன்று நடந்துள்ள இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இருந்து அறிமுகமாகிறது. இனிமேல் டி 20 போட்டிகளில் இந்த விதிமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என தெரிகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
யுவ்ராஜ் சிங் செய்ததை ரிங்கு சிங் ஒரு துளி செய்தாலே போதும்… சுனில் கவாஸ்கர் கணிப்பு!