1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (09:58 IST)

ஐபிஎல் பாக்குறது செம கடுப்பா இருக்கு! – சுட்டி குழந்தை சாம் கர்ரன் வேதனை!

ஐபிஎல் சீசன் தொடங்கி நடந்து வரும் நிலையில் வீட்டிலிருந்து அதை பார்த்து பொறுமையை சோதிப்பதாக சாம் கர்ரன் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஐபிஎல் போட்டியில் இருந்த சில வீரர்கள் இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், சென்னை அணியின் சுட்டிக் குழந்தை என புகழப்படுபவருமான சாம் கர்ரன் காயம் காரணமாக இந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடவில்லை

நேற்று சென்னை – லக்னோ அணி இடையே நடந்த போட்டியில் சென்னை அணி அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தது. இது சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஐபிஎல்லில் பங்கேற்க இயலாதது குறித்து பேசியுள்ள சாம் கர்ரன் “வீட்டில் இருந்தபடி ஐபிஎல் தொடரை பார்ப்பது என்னை பொறுமை இழக்க செய்கிறது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.