1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (19:34 IST)

ஐபிஎல் 2022-; லக்னோ அணி பவுலிங் தேர்வு...

15 வது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் நடந்த முதல் போட்டியில் சென்னைகிங்ஸ் கொல்கத்தாவிடம் தோற்றது.

இந்நிலையில் இன்று அடிபட்ட சிங்கமாய் சென்னை கிங்ஸ், லக்னோ அணிக்கு எதிரான  களமிறங்கவுள்ளது.

அதிக அனுபவம் வாய்ந்த சென்னை கிங்ஸ்க்கு எதிராக புதிய அணியான லக்னோ எதிர்கொண்டாலும் இந்த அணியில் கேப்டன் ராகுல் தலைமையில் பல திறமையான வீரர்கள் ஈடுபட்டுள்ளது. இரு அணிக்கும் சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில்            டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன்  கே.எல்.ராகுல் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்யும் சென்னை அணி பேட்டிங்கில் அசத்துமா என ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.