1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ruthuraj talked about continuously losing toss

ருத்துராஜுக்கு மீண்டும் தொடரும் டாஸ் சோகம்… சி எஸ் கே பேட்ஸ்மேன்கள் செய்யும் கிண்டல்!

சிஎஸ்கே அணி
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.  இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சி எஸ் கே அணி 7 விக்கெட்களை இழந்து 162 ரன்கள் சேர்த்தது.

இதனை அடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது.  இது சென்னை அணிக்கு ஐந்தாவது தோல்வியாகும் இதனால் சென்னை அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு சிக்கலாகி வருகிறது.

இந்த போட்டியில் சி எஸ் கே அணியின் கேப்டன் ருத்துராஜ் டாஸை தோற்றார். இந்த சீசனில் 10 போட்டிகளில் 9 போட்டிகளில் அவர் டாஸைத் தோற்றுள்ளார். இது பற்றி பேசியுள்ள அவர் “நான் டாஸ் போட சென்றாலே எப்படியும் தோற்றுவிடுவேன் என்று தெரிந்து பேட்ஸ்மேன்கள் பேட்டைக் கட்டிக்கொண்டு பேட்டிங் விளையாட தயாராகி விடுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
சி எஸ் கே அணி செய்த பல சொதப்பல்கள்… பஞ்சாப்புக்கு எதிரான தோல்விக்கு என்ன காரணம்!