தொடர்புடைய செய்திகள்
- கோலி சார் இந்தாங்க உங்க கப்..! புண்படுத்துறீங்களே! - வைரலாகும் ஐபிஎல் விளம்பரம்!
- என் ஆலோசனைகளுக்கு தோனியின் ரியாக்ஷன் இதுதான்… விராட் கோலி பகிர்ந்த தகவல்!
- கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கப் போகிறாரா விராட் கோலி? - அவரே கொடுத்த அப்டேட்!
- நான் உணர்ச்சிகளை அதிகமாக வெளிப்படுத்தாவதன்.. ஆனால்?- RCB கேப்டன் ரஜத் கருத்து!
- மைதானப் பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்… அதிரடி அறிவிப்பு!
‘இந்த இளைஞன், நம்மை அதிக நாட்கள் வழிநடத்தப் போகிறார்’- ரஜத் படிதாரை உச்சிமுகர்ந்த விராட் கோலி!
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் இந்த முறையாவது ஆர் சி பி அணிக் கோப்பையை வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் படிதார் பற்றிப் பேசிய விராட் கோலி “அடுத்து வரும் இந்த இளைஞன் நம்மை வெகுநாட்கள் தலைமேற்று வழிநடத்தவுள்ளார். அதனால் அவருக்கு எவ்வளவு அன்பைக் கொடுக்க முடியுமோ அதை நாம் கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.