1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Csk management in talks with dhoni about future plan

தோனியோடு பேச்சுவார்த்தை நடத்தும் சிஎஸ்கே நிர்வாகம்… என்ன முடிவெடுக்கப் போகிறார் ‘தல’?

தோனி
அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். அது தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்குமா என்பதைதான்!. அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. அவரை மிகப்பெரிய தொகை கொடுத்து தக்கவைத்தாலும், அடுத்த மூன்று சீசன்களையும் விளையாடுவார் என்று சொல்ல முடியாது.

இந்நிலையில்தான் டிசம்பர் மாதத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக பிசிசிஐ சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக அறிவித்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆகிறார். இதனால் அவரைக் குறைந்த தொகையான 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த விதியால் தோனி கிட்டத்தட்ட அடுத்த சீசனில் ஆடுவது உறுதி என ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதுகுறித்து எந்தவிதமான முடிவையும் தோனி இன்னும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் இப்போது சிஎஸ்கே நிர்வாகம் அடுத்த சீசனில் தோனி விளையாடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை தோனி தன்னுடைய முடிவை அறிவிக்கவில்லை என்றும் விரைவில் இதுகுறித்து முடிவெடுப்பார் என்றும் தெரிகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இந்தியாவுக்காக அதிகப் போட்டிகள்… தோனியைப் பின்னுக்குத் தள்ளி சாதனைப் படைத்த கோலி!