1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 12 அக்டோபர் 2024 (07:47 IST)

தெலங்கானா காவல்துறையில் DSP பொறுப்பு… சிராஜுக்குக் கிடைத்த கௌரவம்!

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் சிராஜின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்து தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். இதனால்  டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சிராஜ் இடம்பெற்றார். அவர் இடம்பெற்ற இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அப்போதே தெலங்கானா மாநில முதல்வர் அவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சையும் அவர் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தெலங்கானா மாநில காவல்துறையில் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. சமீபத்தில் அவர் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இது ஒரு கௌரவ பொறுப்பாக அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிராஜ், தெலங்கானா மாநில அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.