வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (20:28 IST)

பெண்களை கண்காணிக்க ஒரு செயலி

பெண்களை கண்காணிப்பதற்கென்றே ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறது செளதி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த கூகுள் நிறுவனம், ஒரு அமெரிக்க காங்கிரஸ் பெண் உறுப்பினரிடம், அந்த செயலி தங்கள் சட்ட திட்டத்திற்கு எதிரானது அல்ல என்று கூறியதாக அந்த உறுப்பினர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
பெண்கள் எங்கெல்லாம் பயணிக்கிறார்கள் என்று 'அப்ஷர்' என அழைக்கப்படும் அந்த, சௌதியில் உருவாக்கப்பட்ட, செயலியைக் கொண்டு கண்காணிக்க முடியும்.
 
இந்த செயலியானது கூகுள் ஆப் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கிறது.
இந்த செயலியானது மனித உரிமைகளை மீறுகிறது என செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
 
விரிவாக படிக்க:சௌதி பெண்களை கண்காணிக்கும் செயலி - ஆதரவும் எதிர்ப்பும்