தொடர்புடைய செய்திகள்
- வெங்காயம் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை ரத்து.! மத்திய அரசு அறிவிப்பு...!
- தக்காளி விலை ஒரு கிலோ 10 ரூபாய்.. விவசாயிகள் அதிர்ச்சி..! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!
- கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.! லேசான காயம் என தகவல்.!!
- தமிழக மீனவர்கள் படகின் மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல்.. 4 பேர் படுகாயம்..!
- வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்.! நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி.!!
ஒரே நேரத்தில் வெடித்த ஏராளமான பேஜர் கருவிகள்.. 2750 பேர் காயம்.. 8 பேர் பலி..!
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் அரச அதிகாரிகளுக்கும் தகவல் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்து, 8 பேர் உயிரிழந்ததாகவும், 2,750 பேர் காயமடைந்ததாகவும் வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசா போர் தொடங்கியதிலிருந்து, ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் பாதுகாப்புக்காக கைத்தொலைபேசிகளை தவிர்த்து பேஜர் கருவிகளை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் பயன்படுத்திய பேஜர் கருவிகள் ஒரே சமயத்தில் வெடித்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிப்புக்கு, பேஜர் கருவிகளில் உள்ள லித்தியம் மின்கலங்கள் அதிகம் சூடேறியது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இஸ்ரேலின் சைபர் தாக்குதலாகவும் இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ளது.
ஆனால் இஸ்ரேல் தரப்பு இதுவரை இந்த சம்பவத்திற்கு எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
