1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. human urin is the reason for glacier break

பனிப்பாறை உருகுவதற்கு சிறுநீரும் ஒரு காரணம்!.. என்னப்பா சொல்றீங்க!...

glacier
உலகில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதாவும், அதன் மூலம் கடல் மட்டம் உயர்ந்து பல நாடுகள் மூழ்கும் வாய்ப்பிருப்பதாக அடிக்கடி ஆய்வாளர்கள் எச்சரித்து வருகிறார்கள். சமீபத்தில் கூட கடல் மட்டம் உயர்வதால் மும்பை கொல்கத்தா போன்ற நகரங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும்.. இரண்டு லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்தது.

அதாவது மெல்லின போன்ற காரணங்களால் வெப்பம் அதிகரித்து பணிப்பாறை வருவதால் கடல் மட்டம் உயர்கிறது அப்படி கடல் மட்டம் உயரும்போது அந்த அதிலிருந்து வெளியேறும் போது நகரங்களில் வசிக்கும் மக்களை பாதிக்கும் என சொல்லப்படுகிறது..

சமீபத்தில் கூட பனிப்பாறை உருகி அதிலிருந்து வெளியேறிய வெள்ளத்தால் நேபாளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனவர்கள். 200க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை.

இந்நிலையில்தான், எவரெஸ்ட்டில் உள்ள பனிப்பாறைகள் உருக மனித சிறுநீரும் ஒரு காரணம் என நேபாளம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
எவரெஸ்ட் அடிவாரம் முகாமில் தங்கும் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்களும்,வழிகாட்டிகளும் தினமும் சராசரியாக 6 ஆயிரம் லிட்டர் சிறுநீரை பனியில் கழிக்கின்றனர். இதனால் ஒரு சீசனில் மட்டும் தோராயமாக 154 டன் பனிப்பாறைகள் உருகுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஈரானுடன் போர்!.. அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு!..