தொடர்புடைய செய்திகள்
- உலகக்கோப்பையில் தோற்றதால் எங்களுக்கு கொலை மிரட்டல் வந்தது… கிரிக்கெட் வீரர் பகிர்ந்த ரகசியம்!
- காலிஸ் போல நானும் விளையாடுவேன்… விஜய் ஷங்கரின் ஆதங்கம்!
- அதற்கு சான்ஸே இல்லை… டிவில்லியர்ஸ் முடிவால் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் சோகம்!
- மீண்டும் இலங்கை அணிக்கு திரும்பும் லசித் மலிங்கா… உலகக்கோப்பையில் களமிறங்குகிறாரா?
- டாஸ் வென்ற விராத் கோஹ்லி எடுத்த அதிரடி முடிவு!
எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை… ராயுடு கலாய்த்தது பற்றி விஜய் ஷங்கர்!
உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படாத விரக்தியில் அம்பாத்தி ராயுடு விஜய் சங்கரை கலாய்த்திருந்தார்.
2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைக்கான இந்திய அணியில்.அதிர்ச்சியளிக்கும் விதமாக அம்பாத்தி ராயுடு இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு குறித்து இந்திய அணித் தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத்திடம் கேள்வி எழுப்பியபோது விஜய் சங்கர் ஒரு 3டி பிளெயர். அதனால்தான் அவரை தேர்வு செய்தோம் எனக் கூறினார். இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக அம்பாத்தி ராயுடு டிவிட்டரில் உலகக்கோப்பையைக் காண இப்போதுதான் 3 டி கண்ணாடி வாங்கியிருக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார். ராயுடுவின் இந்த கமெண்ட் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் இப்போது விஜய் ஷங்கர் அதுகுறித்து பேசியுள்ளார். அதில் எனக்கும் ராயுடுவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் நன்றாக பேசிக்கொள்வோம். எனக்கு அவரிடம் எந்த மனக்கசப்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
