1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 19 ஜூலை 2018 (17:07 IST)

பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி தரும் தோனி: கடுப்பான காம்பீர்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் தோனி கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 
 
2 வது போட்டியில் தோனி 58 பந்துகளை சந்தித்து 37 ரன்களும், 3 வது போட்டியில் 66 பந்துகளை சந்தித்து 42 ரன்களும் சேர்த்தார். தோனி அதிக ரன்களை வீணடித்தார்.
 
இந்நிலையில், தோனியை குறித்து கவுதம் காம்பீர் பின்வருமாறு பேசியுள்ளார். காம்பீர் கூறியது பின்வருமாறு, இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் போட்டிகிளிலும் தோனி விளையாடிய விதம் அவரின் வழக்கமான ஆட்டத்தை விட்டு விலகி இருந்தது. 
 
களத்தில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள டாட் பால்களை தோனி சந்தித்தார். ரன்கள் எடுப்பதில் தோனி அக்கறை காட்டவில்லை. தோனி மந்தமான ஆட்டம், அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்குத்தான் அழுத்தத்தையும், நெருக்கடியையும் கொடுக்கும்.
 
கடந்த இரு போட்டிகளிலும் தோனியின் விளையாட்டை நான் குறை கூறவில்லை. ஆனால், அதிகமான உத்வேகத்துடன் பந்துகளை எதிர்க்கொண்டிருக்கலாம் என தெரிவித்தார்.