1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 1 அக்டோபர் 2021 (16:50 IST)

அஸ்வின் செய்ததைப் பார்த்து கோபமான தோனி – சேவாக் வெளியிட்ட ரகசியம்!

கிரிக்கெட் வீரர் அஸ்வின் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறார்.

கடந்த சில ஐபிஎல் சீசன்களாகவே அஸ்வின் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் மன்கட் விதிமுறையை பயன்படுத்தி பட்லரை அவுட் ஆக்கியது சர்ச்சையாகியது. இந்த முறை ஒவர்த்ரோவுக்கு ரன் எடுத்தது சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் இதெல்லாம் கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டுதான் தான் செய்வததாக நியாயப்படுத்தியும் வருகிறார். இது சம்மந்தமாக அவருக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் உருவாகி வருகின்றன.

இந்நிலையில் அஸ்வின் மோசமான செயல்களால் தோனியே கோபமடைந்ததாக சேவாக் தெரிவித்துள்ளார். அதில் ‘2013 ஆம் ஆண்டு நான் பஞ்சாப்புக்காக ஆடிய போது மேக்ஸ்வெல்லை அவுட் ஆக்கிய போது கீழே இருந்து மண்ணை எடுத்து ஊதி கொண்டாடினார். அந்த செயலை நான் கொஞ்சம் கூட ரசிக்கவில்லை. ஆனால் தோனி அதற்கு அவரைக் கடுமையாக கோபத்தோடு கண்டித்தார்’ எனக் கூறியுள்ளார்.