1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (13:18 IST)

தலைவி படம் தோல்வி… அரவிந்த் சாமி எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் அரவிந்த்சுவாமி ஒரு படத்துக்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்தார்.

பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான திரைப்படம் ’தலைவி’. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இதையடுத்து கடந்த மாதம் வெளியாகி அட்டார் ப்ளாப் ஆனது.

இந்த படத்தில் எம் ஜி ஆராக நடித்திருந்த அரவிந்த் சுவாமி இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் படம் தோல்வி அடைந்தது அவருக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தத்தை அளித்துள்ளது. இந்நிலையில் இப்போது தனது சம்பளத்தைக் குறைத்து மற்ற படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். இதுவரை 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்த அவர் இப்போது கணிசமான தொகையைக் குறைத்துள்ளாராம்.