வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (08:09 IST)

வாட்ஸ் ஆப்பில் ஆடியோ அனுப்பிவிட்டு காதலனுடன் சென்ற மனைவி – தற்கொலை செய்துகொண்ட முதியவர் !

கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் கணவரை பிடிக்கவில்லை என வாட்ஸ் ஆப்பில் மெஸேஜ் அனுப்பிவிட்டு பெண் ஒருவர் மாயமாகியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. இவரது மனைவியின் பெயர் ராஜஸ்ரீ. இவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என சொல்லப்படுகிறது. ராஜஸ்ரீ தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த சந்தோஷ் என்ற இளைஞரைக் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வேல்முருகன் வீட்டில் தனது மனைவி இல்லாமல் இருப்பதை அடுத்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். வாட்ஸ் ஆப்பில் வ்ந்த ஆடியோவில் அவரது மனைவி ராஜஸ்ரீ தனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள்வதாகவும் தன்னை யாரும் தேட வேண்டாம் எனவும் சொல்லியிருந்தார்.

இந்த ஆடியோவை அடிப்படையாகக்கொண்டு வேல்முருகன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, ராஜஸ்ரீ சந்தோஷுடன் தான் சென்றுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த சந்தோஷின் தந்தை அவமானத்தால் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.