1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (15:22 IST)

முதல்வர் தொகுதியிலேயே நீர் தேங்கியுள்ளது- இபிஸ்

சென்னையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அங்குள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் நேரடி ஆய்வில் ஈடுபட்டு மக்களுக்கு உதவி வருகிறார். அதேசமயம் முந்தைய ஆட்சியின் மீது அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளதாவது: அதிமுக மீது வேறு குற்றம்சாட்ட காரணம் இல்லையென்பதால் முதல்வர் ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் குறைகூறுகிறார். முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் முன்கூட்டி செயல்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளர்.