தொடர்புடைய செய்திகள்
- விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 3 கலசங்கள் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி
- கடலூர்: விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 3 தங்க கலசங்கள் திருட்டு!
- மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்கவைத்தால் கடும் நடவடிக்கை
- நகராட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக திமுக கவுன்சிலர் அறிவிப்பு
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்திரவினையும் மீறும் திமுக பேரூர் கழக செயலாளருக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?
விருத்தீஸ்வரர் கோவில் கலசங்கள் கண்டுபிடிப்பு: ஒருவர் கைது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருத்தாச்சலம் அருகே உள்ள விருத்தீஸ்வரர் கோயிலில் மூன்று கோபுர கலசங்கள் திருடப்பட்ட நிலையில் அந்த கலசங்கள் தற்போது போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருதீஸ்வரர் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் திடீரென அந்த கோவிலில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட மூன்று கோபுர கலசங்கள் திருடு போயின
இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளின் உதவியால் கோபுர கலசங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
விருத்தாச்சலம் பெரியார் நகர் அமுதம் தெருவில் அந்த கலசங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் இதுதொடர்பாக சந்தோஷ் குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
அடுத்த கட்டுரையில்
