1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk velmurugan comment against cm vijay

ஓட்டுக்குதான் அம்பேத்கர்!. இனிமே விஜய்க்கு தேவையில்ல!.. த.வா.க வேல் முருகன் கோபம்!...

ambetkar
சேலம் மாவட்டம் ஒதியத்தூர் கிராமத்தில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருப்பது போல உருவாக்கப்பட்ட அம்பேத்கர் சிலை கடந்த ஆறு வருடங்களாக திறக்கப்படாமல் இருக்கிறது. ஏனெனில் இந்த சிலை விவகாரமாக இரு தரப்பு சாததியினருக்கு மோதல் இருந்ததால் அதை அரசு மூடி வைத்திருக்கிறது
.
கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அம்பேத்கர் சிலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என ஒரு தரப்பினரும், சிலையை திறக்க வேண்டும் என பட்டியலின சமுதாயத்தினரும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துவிட்டது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வர் ஆகிவிட்டார்.

விஜய் கட்சி துவங்கும் போது அம்பேத்கரை தனது கொள்கை தலைவர்களில் ஒருவராக அறிவித்திதார். ஆனால் அவர் முதலமைச்சரானபின்னரும் அம்பேக்கர் சிலை திறக்கப்படவில்லை என பா.ரஞ்சித் போன்றவர்கள் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இதுபற்றி கருத்து தெரிவித்த போது ‘தேர்தலுக்கு முன்பு வரை தலித் மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக அம்பேத்கரை தனது கொள்கை தலைவர் என விஜய் பேசினர். ஆனால் தேர்தலில் தலித் மக்கள் வாக்குகள் கிடைத்து அவர் வெற்றி பெற்ற பின் அவருக்கு அம்பேத்கர் தேவையில்லாமல் போய்விட்டார்.. இப்போது அம்பேத்கர் சிலையை திறந்தால் என்ன அல்லது திறக்காமல் போனால் அவருக்கென்ன கவலை?’ என்று பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அரசியல் பற்றி தனுஷ் நேரம் வரும்போது அ|றிவிப்பார்!.. சுப்பிரமணிய சிவா பேட்டி!...