வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 30 மார்ச் 2022 (08:51 IST)

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்கிறது சுங்கக்கட்டணம்: அதிர்ச்சி அறிவிப்பு

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்கிறது  சுங்கக்கட்டணம்: அதிர்ச்சி அறிவிப்பு
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது  என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
 
சென்னை அருகே உள்ள சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை சுங்கக்கட்டணம் உயர்வு என்ற அறிவிப்பு வாகன ஓட்டிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
தமிழக அரசு 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில்  சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது  என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது  என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன