தொடர்புடைய செய்திகள்
- பட்டபெயர் வைப்பதை நிறுத்துங்க.. இல்லாட்டி நாங்களும் வைப்போம்! – ஸ்டாலினுக்கு அமைச்சர் எச்சரிக்கை!
- என் ரசிகர்கள் மாஸ்டர் படத்தை பாருங்க.. ஏன்னா?! – சிம்பு வெளியிட்ட அறிவிப்பு!
- திமுக கூட்டணி எளிதாக 200 தொகுதிகளை வெல்லும் – ஆருடம் கூறும் கூட்டணிக் கட்சி தலைவர்!
- கூட்டணியில் குழப்பம்; அமித்ஷா சென்னை வருகை! – ரஜினியை சந்திக்க வாய்ப்பு!
- கவர்ச்சி கண்ண மறைக்குது... இஷ்டத்துக்கு இறங்கி அடிக்கும் சாக்ஷி அகர்வால்!
திரையரங்கை முழுவதும் நிரப்ப அனுமதி.. ஹவுஸ் ஃபுல்தான்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!
பொங்கலுக்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளியாகும் நிலையில் திரையரங்குகளை முழுவதும் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அமர வேண்டும் என அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளியாகும் நிலையில் 100% பார்வையாளர்களை அனுமதித்தால் மட்டுமே டிக்கெட் விலையை உரிய கட்டணத்தில் வழங்க இயலும் என்றும், திரையரங்குகளும் நஷ்டத்தில் இருந்து மீள முடியும் என்றும் அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
இதுகுறித்து நடிகர் விஜய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசிய நிலையில் தற்போது திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அமர வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் பட வெளியீட்டிற்கான கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
