1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn cm vijay meeting with higher officials

முதல்வரானவுடன் வேலையை துவங்கிய விஜய்!.. வைரலாகும் போட்டோ!...

vijay
தவெக ஆட்சியமைக்க தேவையான ஆதரவுகள் கிடைத்தநிலையில் இன்று காலை சென்னை உள் விளையாட்டு அரங்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். மேலும், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், நிர்மல் குமார் உள்ளிட்ட சிலர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

அதன்பின் தமிழகத்தின் முதலமைச்சராக மேடையில் பேசிய விஜய் ‘நான் ஒன்றும் தேவதூதன் அல்ல. உங்களை போல ஒருவன்தான். பசி, கஷ்டங்களை சின்ன வயதிலேயே பார்த்திருக்கிறேன். இது புதிய அத்தியாயம். புதிய வரலாறு.. இன்றிலேயே என் பணிகளை துவங்குகிறேன். நான் மக்களை ஏமாற்றமாட்டேன்.. எனக்கு அவகாசம் கொடுங்கள். படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறேன்..இத்தனை கோடி மக்கள் என் பக்கம் இருக்கும்போது எதையும் செய்யமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது’ என பேசினார்.

குறிப்பாக, இந்த ஆட்சியை பொறுத்தவரை நான் மட்டுமே அதிகார மையம். பல அதிகார மையங்கள் இங்கே இல்லை. வாய்ப்பு கிடைத்துவிட்டது என நினைத்து தவறு செய்ய நினைத்தால் இப்போதே அதை அழித்துவிடுங்கள். நான் யாரையும் தவறு செய்ய விட மாட்டேன். நானும் தப்பு செய்யமாட்டேன்’ என கட்சி எம்.எல்.எக்களை எச்சரித்தார்.

vijay
vijay


அதன்பின், நேராக தலைமைச் செயலகம் சென்று முதல்வர் இருக்கையில் அமர்ந்தார். அப்போது தலைமை செயலக அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துக்களை கூறினார்கள். அதன்பின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற்றது. முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
முதல்வர் விஜய் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.. அரசாணை வெளியீடு..!