1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tk sivakumar talk in south indian cm meeting

மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கும் நல்லது!.. டிகே சிவக்குமார் பேச்சு..

sivakumar vijay
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் இரண்டும் சொல்லியும் கர்நாடக அரசு இதுவரை காவிரி நீரை திறந்துவிடவில்லை. இதை வைத்து அந்த மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் அரசியல் செய்து வருகிறார். ஏனெனில், மேகதாது அணையை கட்டவேண்டும் என்பது அவரின் முடிவாக இருக்கிறது.

இந்நிலையில், இன்று நடக்கவுள்ள தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் சென்னை வந்திருக்கிறார். தமிழக முதல்வர் விஜயும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கிறார். இந்த மாநாட்டில் நதிநீர் பிரச்சனை, நதிநீர் இணைப்பு, மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலை திட்டங்கள் என பல விஷயங்களும் விவாதிக்கப்படவிருக்கிறது.

இந்நிலையில், இந்த மாநாட்டில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் ‘மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதல் தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களும் பயணடையும். அணை கட்டப்பாடாததால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கின்றன. நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும்’ என அவர் கூறினார். மேலும், கிருஷ்ணா நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடந்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பள்ளி முதல்வரை 27 முறை கத்தியால் குத்தி கொலை செய்த 10ம் வகுப்பு மாணவன்!..