1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 டிசம்பர் 2021 (14:51 IST)

சிவசங்கர் பாபா மீது 8 போஸ்கோ வழக்குகள்: சிபிசிஐடி அதிரடி!

சிவசங்கர் பாபா மீது ஏற்கனவே 5 போஸ்கோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது 
 
சென்னை அருகே சுசில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். இதனை அடுத்து அவர் மீது அடுத்தடுத்து போஸ்கோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்பதும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே 5 போஸ்கோ வழக்குகள் உள்பட மொத்தம் ஆறு வழக்குகள் அவர் மீது இருக்கும் நிலையில் தற்போது மேலும் 3 போஸ்கோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இதனையடுத்து அவர் மீது தற்போது 8 போஸ்கோ வழக்குகள் உள்பட மொத்தம் 9 வழக்குகள் உள்ளன என்பதும் இந்த ஒன்பது வழக்குகளிலும் அவர் ஜாமீன் பெற்றால் மட்டுமே வெளியே வர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது