தொடர்புடைய செய்திகள்
- சட்டப்பேரவை கூட்டம் நேரடி ஒளிபரப்பு! – அன்புமணி ராமதாஸ் வரவேற்பு!
- நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம்! – முதல்வர் அறிவிப்பு!
- மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா! – ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!
- எம்.ஐ.டி கொரோனா பாதிப்பு 80 ஆக உயர்வு! – 50 பேருக்கு ஒமிக்ரான்??
- ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது! தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் குழு!
இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் மழை - வானிலை மையம் தகவல்!
இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சியால் பல இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் முன்னறிவிப்பின்றி கடும் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்நிலையில் இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் இது குறித்து விரிவாக தெரிவித்துள்ளதாவது, ஜனவரி 8 ஆம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். வங்கக்கடலில் ஜனவரி 9 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதால் தென்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
