1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 ஜூன் 2020 (10:04 IST)

சிறுமிக்கு ஆபாசப்படம் காட்டி சீரழித்த சிறுவர்கள்! – கோவையில் அதிர்ச்சி!

கோயம்புத்தூரில் ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கி தந்த ஸ்மார்ட்போன் மூலம் சிறுமிக்கு ஆபாசப்படம் காட்டி வன்கொடுமை செய்த சிறுவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரில் தாயை இழந்த சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் அத்தையோடு மாடி வீடு ஒன்றில் வாடகைக்கு வாழ்ந்து வந்துள்ளார். தந்தையும், அத்தையும் வேலைக்கு சென்று விடும் நேரத்தில் கீழே உள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று டி.வி பார்ப்பதை சிறுமி வழக்கமாக கொண்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் தனது 10வது படிக்கும் மகனுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்காக ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அதில் ஆபாசப்படங்களை பார்த்து வந்த அந்த சிறுவன், டிவி பார்க்க வந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தன் நண்பர்கள் இருவரையும் அழைத்து வந்து அவர்களையும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய செய்துள்ளார். இந்நிலையில் சில நாட்களின் அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

அப்போது இந்த விவரங்களை சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு மாணவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோயம்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.