தொடர்புடைய செய்திகள்
- 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ரியல் எஸ்டேட் அதிபர் கைது!
- நாளுக்கு நாள் விலை உயரும் பெட்ரோல்: இன்றைய நிலவரம்!
- 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்புகள்: மாநிலவாரி நிலவரம்!
- இப்போதான் தண்ணீர் திறந்து விட்டாங்க.. அதுக்குள்ள உடைப்பா! – அப்செட்டான புதுக்கோட்டை மக்கள்!
- கொரோனாவால் நிதி நெருக்கடியில் கிரிக்கெட் வாரியம்! அதனால் எடுத்த முடிவு!
40 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா; அதிர வைக்கும் சென்னை நிலவரம்!
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு சென்னையில் 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,148 பேரும், தண்டையார் பேட்டையில் 4,963 பேரும், தேனாம்பேட்டையில் 4,785 பேரும், கோடம்பாக்கத்தில் 4,329 பேரும், அண்ணா நகரில் 4,142 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பல மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மணலி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் ஆயிரத்தை நெருங்கி வருகின்றன.
அடுத்த கட்டுரையில்
