1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai corona cases zone wise

40 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா; அதிர வைக்கும் சென்னை நிலவரம்!

Tamilnadu
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு சென்னையில் 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,148 பேரும், தண்டையார் பேட்டையில்  4,963 பேரும், தேனாம்பேட்டையில் 4,785 பேரும், கோடம்பாக்கத்தில் 4,329 பேரும், அண்ணா நகரில் 4,142 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பல மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மணலி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் ஆயிரத்தை நெருங்கி வருகின்றன.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கொரோனா வார்டாகும் பல்கலைகழக விடுதி: மாணவர்கள் வெளியேற்றம்!