1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2022 (08:14 IST)

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

fishermen
தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகவும் அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்ட 4 மீனவர்களை மீட்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva