1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Schools and Colleges are leave for some districts

கனமழை எதிரொலி: மேலும் 9 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை!

பள்ளிகள்
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்கனவே 10 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒன்பது மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தொடர் மழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு அறிவித்துள்ளார். மேலும் கனமழை காரணமாக விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை