தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த தாய்-மகன் கைது.. 4,200 போதை மாத்திரைகள் பறிமுதல்
- சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மாற்றமில்லை.. திடீர் முடிவெடுத்த அதிகாரிகள்..!
- 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம்.. முதல்வர் தொடங்கி வைக்கிறார்..
- சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.. அதிரடி கைது..!
- நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் கைது.. சென்னை ரிப்பன் மாளிகை அருகே பரபரப்பு..!
கூவம் ஆற்றில் இறங்கிய போராடிய தூய்மை பணியாளர்கள்.. பரபரப்பு தகவல்..!
சென்னையில் கடந்த சில நாட்களாகத் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்கள், இன்று ஒரு அதிர்ச்சிகரமான முடிவை எடுத்தனர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் போன்ற அடிப்படை தேவைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் கிரீன் சாலை பகுதியில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், திடீரென மாசடைந்த கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே சென்னை மாநகராட்சி அலுவலகம், அண்ணா அறிவாலயம் மற்றும் கலைஞர் நினைவிடம் ஆகிய இடங்களில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு தரப்பில் இருந்து உரியப் பதில் கிடைக்காததால், இந்த அதிரடி முடிவை எடுத்ததாக பணியாளர்கள் தெரிவித்தனர். கூவம் ஆற்றில் இறங்கி முழக்கமிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
கடும் துர்நாற்றம் மற்றும் சுகாதாரச் சீர்கேடு நிறைந்த கூவம் ஆற்றில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் போராடியது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செய்திகள், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், கூவம் ஆறு போராட்டம், எழும்பூர் பரபரப்பு, மாநகராட்சி ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கை, காவல்துறை கைது, சென்னை மாநகராட்சி, சமூக நீதி, தூய்மைப் பணியாளர் நலன்
Edited by Mahendran
