1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. saidapet murder case five arrested

சைதாப்பேட்டை பெண் பழ வியாபாரி படுகொலை.. கொலையான பெண்ணின் தங்கை கைது..!

சைதாப்பேட்டை
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் ஐந்து பேர் கைதாகி இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் கொலையான பெண்ணின்  தங்கை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன  
 
ஜூலை 19ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வந்த புறநகர் ரயிலில் ராஜேஸ்வரி என்ற பழ வியாபாரி பயணம் செய்தார். அவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிய போது மர்ம நபர்கள் சில அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.
 
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தற்போது ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  அவர்களில் ஒருவர் கொலையான ராஜேஸ்வரியின் தங்கை என்றும் கூறப்படுகிறது. கைதானவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பெகாசஸ், பிபிசி ஆவணப்படம், மணிப்பூர்.. பாராளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியாகும் பிரச்சனைகள்: சதிக்கு பின் யார்?