தொடர்புடைய செய்திகள்
- ''செயற்கை நுண்ணறிவால் அணு ஆயுதப் போர் கூட உருவாகலாம்'' - ஜேம்ஸ் கேமரூன் எச்சரிக்கை
- முத்தமிழ் பேரவையின் 42 வது இசைவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
- வழக்கம்போல மக்களை ஏமாற்றும் திமுக அரசு: முதியோர் உதவித்தொகை குறித்து டிடிவி தினகரன் விமர்சனம்..!
- அமெரிக்காவை தொடர்ந்து கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் அரிசு தட்டுப்பாடு ஏற்படும் சூழல்! வைரல் வீடியோ
- காவிரியில் தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு: அரசுக்கு ஐடியா கொடுத்த ராமதாஸ்...!
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.. கொலை வழக்கு தொடர்பாக விசாரணையா?
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்து உள்ள திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
நெல்லை மட்டுமின்றி திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ராமலிங்கம் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும், மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
